கர்நாடகாவில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஏ.பி.வி.பி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியில், இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி தீர்த்தஹல்லி தலைவர் பிரதீப் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு கல்லூரி மாணவிகளை ஏமாற்றி அந்தரங்க வீடியோக்கள் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதீக் கவுடாவின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் போலீசார் பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.