பெங்களூரு, ஏப். 6 - கர்நாடகத்தில், முஸ்லிம் இளை ஞர் இத்ரீஸ் பாஷாவை, அடித்துக் கொன்ற புனீத் கெரேஹள்ளி தலைமையிலான மதவெறி கொலைக்கும்பல் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சாத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த மார்ச் 31 அன்று இத்ரீஸ் பாஷா என்ற முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப் பட்டார். இவர் இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்திச் சென்றதாக கூறி, ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’ என்ற இந்துத்துவா அமைப்பை நடத்தி வரும் புனீத் கெரேஹள்ளியும், அவ ரது கூட்டாளிகளுமாக 5 பேர் சேர்ந்து இந்த படுகொலையை அரங்கேற்றினர். முதலில், இத்ரீஸ் பாஷாவிடம் ரூ. 2 லட்சம் பணம் தருமாறு மிரட்டி யுள்ளனர். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய பின்னணி யிலேயே இத்ரீஸ் பாஷாவை அடித்துக் கொன்றனர். மேலும் அவருடன் லாரியில் வந்த இர்பான், லாரி ஓட்டுநர் சையத் ஜாகீர் ஆகி யோரையும் கொடூரமாகத்தாக்கினர். இதுதொடர்பாக, சையத் ஜாகீர் அளித்த புகாரின் பேரில், ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’யைச் சேர்ந்த புனீத் கெரேஹள்ளி உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார், அவர்களைத் தேடி வருவதாக கூறியிருந்தனர்.
இதனிடையே, புனீத் கெரேஹள்ளி, பாஜக மற்றும் சங்- பரிவாரத் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, கடந்த சில ஆண்டு களாகவே கர்நாடகத்தில் மதப் பிரச்சனைகளைத் தூண்டி பதற்ற த்தை ஏற்படுத்தி வந்ததாகவும், அவர்மீது 10-க்கும் மேற்பட்ட வழ க்குகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. கொலையாளி புனீத் கெரேஹள்ளி, பாஜக தலைவர்கள் சி.டி. ரவி எம்எல்ஏ, தேஜஸ்வி சூர்யா எம்.பி., தில்லி கலவர நாயகன் கபில் மிஸ்ரா, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தா லிக் ஆகியோருடன் இருக்கும் புகை ப்படங்களும் ஊடகங்களில் வந்தன.
2021 ஜூலையில், சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி, பேகூர் ஏரியில் இருந்து ஒரு சிவன் சிலை யை அகற்ற முயன்றபோது, இது கிறிஸ்தவ மிஷனரிகளின் சதி என்று புனீத் கேரேஹள்ளி கலவரத்தைத் தூண்டினார். 2021 செப்டம்பரில், மதமாற்றம் செய்வதாகக் கூறி கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத் தை கேரேஹள்ளியும் அவரது கும்ப லும் சீர்குலைத்தது. அதுமட்டு மல்லாமல், கடந்த 2022 நவம்பரில், விஸ்வேஸ்வரபுரத்தில் இந்து மதத் திருவிழாவில் இஸ்லாமிய வியா பாரிகள் கடை அமைப்பதற்கு அனு மதி அளிக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்தார். அதன்தொட ர்ச்சியாக, 2022 டிசம்பரில், ‘ராஷ்ட்ரா ரக்சனா படை’ என்ற அமைப்பை யும், ‘அத்வா’ என்ற யூடியூப் சேன லையும் துவங்கிய கேரேஹள்ளி, கால்நடை வியாபாரிகளைத் தங்கள் அமைப்பினர் தடுத்து நிறுத்தும் வீடி யோக்களை வெளியிட்டார். அதன்பிறகு, மாட்டு வியாபாரிகளி டம் பணம் பறிப்பில் ஈடுபடு வதாகவும் கெரேஹள்ளி மீது குற்றச் சாட்டுகள் இருந்து வந்தன. கடைசி யாக தற்போது கொலை வழக்கி லும் புனீத் கெரேஹள்ளி சிக்கி யிருப்பதாக சமூக செயற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்தான், இத்ரீஸ் பாஷா கொலை வழக்கில், புனீத் கெரேஹள்ளி, அவரது கூட்டாளி கள் கோபி, பவன்குமார், சுரேஷ் குமார் மற்றும் பில்லிங் அம்பிகர் ஆகியோர் ராஜஸ்தானில் தலை மறைவாகி இருந்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.