கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனாவின் மணற் சிற்பம் ஒடிசாவின் பூரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டீகோ மாரடோனா. உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ரசிகர்களினால் ஈர்க்கப்பட்டவர் டீகோ மாரடோனா. அவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இது கால்பந்து விளையாட்டு உலகின் பெரும் இழப்பாக உள்ளது. இந்நிலையில் கால்பந்து வீரர் மாரடோனாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை யொட்டி ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மாரடோனாவை நினைவு கூரும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் அவரது உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். அதில் அவருக்கு அஞ்சலி வார்த்தைகளும் கால்பந்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பம் இன்று கால் பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சிற்பம் இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டும் வருகிறது.