சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒடிசாவில் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றி யது பாஜக. மாநிலத் தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு வன் முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தில்லி ஆனந்த் விஹார்- ஒடிசாவின் புரி இடையிலான நந்தன்கனான் விரைவு ரயில், ஒடிசா வின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அடுத்த 5 நிமிடங்களில் பவுத்பூர் அருகே ரயில் சென்று கொண்டி ருந்தபோது மர்ம நபர்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட துடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினர். இதனால் துப்பாக்கிக் குண்டுகள் சில, ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன. நல் வாய்ப்பாக பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை. இந்த சம்ப வத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்திய கும்பல், அங்கிருந்து தப்பி யோடிவிட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் மேற் கண்ட ரயில் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.