states

img

உத்தரகண்டில் மதரஸாவை இடித்து வன்முறையை தூண்டியது பாஜக!

நைனிடால், பிப். 9- உத்தரகண்டில் மதரஸாவை இடித்து அம்மாநில பாஜக அரசு தூண்டிவிட்ட வன் முறையில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலை யில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானிக்கு அருகே உள்ளது பன்பூல்புரா பகுதி.

 இப்பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோத மாக கட்டப்பட்டதாக கூறி நைனிடால் மாவட்ட நிர்வாகம் மதரஸா மற்றும் மசூதியை இடிக்க உத்தரவிட்டது.  இந்த இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் ஹல்த்வானியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான இடத்தில் வசித்துவரும் இஸ்லா மிய மக்களை துரத்த உத்தரகண்ட் பாஜக அரசு துடியாய்த் துடித்து வரும் நிலையில், இஸ்லாமிய மக்கள் வாழும் இடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது என சமீபத்தில் நீதி மன்றம் உத்தரவிட, இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

பிப்ரவரி 14 அன்று  இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஆளும்  பாஜக அரசு பிரச்சனையை திசைத் திருப்பவே பன்பூல்புரா பகுதியில் உள்ள மதரஸா மற்றும் மசூதியை இடித்து வன் முறையை துவக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே மணிப்பூரில் அங்குள்ள மெய்டெய் - குக்கி மக்களுக்கு இடையே  பாஜக அரசு வளர்த்துவிட்ட பகைமை யால், அம்மாநிலம் கடந்த 2023 மே மாதம் முதல் வன்முறை நெருப்பால் பற்றி எரிந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.