states

img

உத்தரகண்ட்டில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை - பொதுப்பணித்துறை அறிக்கை

உத்தரகண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றது என்று அம்மாநில அரசிடம் பொதுப்பணித்துறை அறிக்கை அளித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தமாக 3262 பாலங்கள் உள்ளன. இதில் 5 மண்டலங்களில் உள்ள 2618 பாலங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வை உத்தரகண்ட் மாநில பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், 36 பாலங்கள் பாதுகாப்பற்றது என்றும், வாகனங்கள் செல்ல தகுதியற்றது என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கையை அம்மாநில அரசிடம் பொதுப்பணித்துறை அளித்துள்ளது.
குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்தை அடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.