states

img

அசாம் மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி

அசாம் மேகாலயா எல்லையில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் அஸ்ஸாம் மேகாலாயா இடையேயான எல்லை பிரச்சனை உக்கிரமாக வெடித்தது. அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த சண்டையில் 6 பேர் பலியானார்கள். பின்னர் இரு மாநில எல்லை பிரச்சனையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தலையிட்டு, இருமாநில எல்லை கூட்டம் நடத்தியது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை எழுந்துள்ளது.

அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று சென்றுள்ளது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது லாரி ஓட்டுநர் தப்பி முயன்றதால் வனத்துறை துப்பாக்குச் சூடு நடத்தி மூன்று பேரை பிடித்து சிறைபிடித்தனர்.

இந்த தகவல் மேகாலயா மாநிலத்தில் பரவியது, பயங்கர ஆயுதங்களுடன் சில கும்பல் அஸ்ஸாம் வனத்துறையை முற்றுகையிட்டது. அப்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என அந்த கும்பல் வலியுறுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஸாம் போலிஸ் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதி முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.