மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணமில்லாததால், சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே 5 மாத குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்து மறைத்து தந்தை கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 ஆண் குழந்தைக்கு கடந்த வாரம் தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக சிலிகுரி பகுதியில் உள்ள நார்த் பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
பணம் இல்லாத காரணத்தால் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார். ஆனால், அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களோ ரூ.8,000 கொடுத்தால் தான் வர முடியும் என்று கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே 5 மாத குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்து மறைத்து அஷிம் கொண்டுவந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.