சென்னை, ஜூன் 19- டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கென, நாட்டிலேயே முதன்முறையாக முன்னோடியான ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சையுடன் பால், முட்டை மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளும் வழங்கப்பட உள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சிறுநீரக நோயின் தீவிரம் சிறுநீரக பாதிப்பு அல்லது நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போகும் தீவிர நிலையாகும். இது உடலில் கழிவுப் பொருட்கள் சேர்வதற்கு வழிவகுக் கிறது. தமிழகத்தில் 8.4 சதவிகித மக்கள் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புரதச்சத்தின் அவசியம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் கே. சாந்தாராம் விளக்கியுள்ளபடி, டயாலிசிஸ் உடலிலிருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அதேவேளையில் அத்தியாவசிய புரதங்களையும் வெளியேற்றி விடுகிறது. இதனால் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும், இழப்புகளை ஈடு செய்யவும் அதிக புரதச்சத்து தேவைப்படுகிறது. திட்டத்தின் விவரங்கள் அரசு மருத்துவமனைகளில் சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தலா 27 கிராம் புரதம் மற்றும் 400 கிலோ கலோரி கொண்ட உணவாக 100 மில்லி பால், இரண்டு முட்டைகள், கறுப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் 20 கிராம் எடையுள்ள மூன்று பிஸ்கட்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,170க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் யூனிட்கள் உள்ளன.