states

img

ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

ராஜஸ்தானின் டவுசா மாவட்டம், ஜோதிபுரியா கிராம பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை புதனன்று மாலை 6 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து மீட்புக் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சென்று இரவு முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 31 அடிக்கு மீட்புக் குழுவினர் பள்ளம் தோண்டி குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட மகிழ்ச்சியில் சுற்றியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். மீட்புப் படையினருக்கு பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.