states

img

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்து தவிப்பு

ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே ஜோத்புரியா கிராம பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ராஜஸ்தானின் டவுசா மாவட்டம், ஜோதிபுரியா கிராம பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சென்று மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

35 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.