states

img

புதுச்சேரி விடுதலை நாள்: சிபிஎம் கொண்டாட்டம்

புதுச்சேரி,நவ.1- பிரெஞ்சு காலனியாதிக்கத்திலி ருந்து வந்த புதுச்சேரி பிரதேசம் கடந்த 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை பெற்று இந்தியா வோடு இணைந்தது. விடுதலை பெற்ற அந்த நாளை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தி லுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், மூத்த  நிர்வாகி லட்சுமணன் தேசியகொடியை ஏற்றி வைத்தார்.  பாகூரில் நடைபெற்ற நிகழ்சிக்கு கட்சியின் கொம்யூன் செயலாளர் பி.சரவணன் தலைமை தாங்கினார். மூத்தத் நிர்வாகி பி.கல்கி தேசிய கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதில்  மாநிலக் குழு உறுப்பினர் கலியன்,கொம்யூன்ககுழு உறுப்பினர் வடிவேல் மற்றும் சாம்ப சிவம்,சண்முகம், முருகையன், செல்வராஜ் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.  இதேப்போல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொட்டும் மழையில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.