புனேவில் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இந்திராயானி ஆற்றின் குறுக்கே இருந்த 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.