states

img

ஷாருக்கான் அஜய் தேவ்கனுக்கு ரூ.5 மணி ஆர்டர் அனுப்பிய மாணவி-ஏன் தெரியுமா?

ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு மாணவி ஒருவர்  ரூ.5 மணி ஆர்டர் அனுப்பிய சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மத்தியப் பிரதேச மாநிலம் கர்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி தட்கன்.   இவர், பாலிவுட் பிரபலங்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  ஷாரூக் கான், அஜய் தேவ்கன் இருவருக்கும் ரூ.5 மணி ஆர்டருடன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், “உங்கள் கையிலிருந்து ஒரு பான் மசாலா பாக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காவே நான் உங்களுக்கு 5 ரூபாய் மணி ஆர்டரை செய்துள்ளேன். நீங்கள் இருவரும் எனக்கு பிடித்த நடிகர்கள். ஆனால் நீங்கள் பான் மசாலாவை விளம்பரம் செய்கிறீர்கள் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நான் அளித்த பணத்திற்காக நீங்கள் இப்போது எனக்கு பான் மசாலாவை அனுப்புங்கள்... நானும் அதை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறேன்.
நான் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே ட்வீட் செய்தேன். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. இதனால் சகோதர - சகோதரிகளுக்கான சிறப்பு நாளில் இந்த கடிதத்தை உங்கள் இருவருக்கும் எழுதுகிறேன். எனக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. நான் உங்கள் இருவரை எனது பெரிய அண்ணன்களாக பார்க்கிறேன். அதனால்தான் உங்களை பான் மசாலாக்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பான் மசாலாக்கள் ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன. நீங்கள் இருவரும் இந்தியாவின் அடையாளமாக உள்ளீர்கள். உங்களை இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.