states

img

மத்தியப் பிரதேசம் சரக்கு ரயில் விபத்து - ரயில் இயக்குநர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசம் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ரயில் இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது, அதே வழியில் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இயக்குநரான ராஜேஷ் பிரதாப் (51) என்பது உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.