போதைப்பொருள் விவகாரத்தில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் அமேசான் வழியாக இனிப்பு பொருட்களை விற்பனை செய்வது போல் போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தல் இருந்து ஸ்டீவியா ஆலை சார்ந்த இனிப்புகளை விற்பனை செய்வது போல் அமேசான் நிறுவனம் மூலம் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய மதிப்பில் சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 கிலோ மரிஜுவானா போதைப்பொருள் கடத்தப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச போலீசார் அமேசான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.