திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்து போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்தின் போர் விமானமான F-35 விமானத்தின் விமானி, எரிபொருள் குறைவாக இருந்ததால் தெரிவித்து நேற்று இரவு தரையிறங்க அனுமதி கோரியது. இதை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். அதன் பின்னர் இரவு 9.30 மணி போர் விமானம் தரையிறங்கியது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பிறகு எரிபொருள் வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.