states

img

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார் பத்ம லட்சுமி.
பத்ம லட்சுமி என்பவர் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பார் கொவுன்சிலின் மூலம் தேர்வான 1580 வழக்கறிஞர்களில் பத்ம லட்சுமியும் ஒருவர். இதன் மூலம் கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வழக்கறிஞர் பத்ம லட்சுமிக்கு கேரளாவின் தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோயிதா மோண்டலுக்குப் பிறகு பத்ம லட்சுமியின் சாதனைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 2017ல் மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.