மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.