states

img

3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் தீக்காயங்களை ஏற்படுத்திய அங்கன்வாடி ஆசிரியர்

கர்நாடகாவில் அங்கன்வாடி துணை ஆசிரியர் ஒருவர், 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் தீக்காயங்களை ஏற்படுத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் உள்ள  கோடேகெரே கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் அடிக்கடி சிறுநீர் கழித்து துணிகளை ஈரமாக்குவதால், அங்கன்வாடி துணை ஆசிரியர் ஒருவர் தீக்குச்சியை கொளுத்தி சிறுவனின் பிறப்புறுப்பில் தீக்காயங்களை ஏற்படுத்தி உள்ள கொடூரம் நடந்துள்ளது. சிறுவனை குளிக்க வைக்கும் போது இந்த தீக்காயங்களை அவனது பாட்டி கண்டுள்ளார். இதை அடுத்து, சிறுவனின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.