இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் உள்ள சக்கி ரயில்வே பாலம் கனமழையில் உடைந்து நொறுங்கியது.
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மஷலாவில் இன்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டு, கனமழை பொழிந்த நிலையில், மண்டி மாவட்டத்தில் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல், கங்ரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கங்ரா மாவட்டத்தில் உள்ள சக்கி ரயில்வே பாலம் கனமழையில் உடைந்து நொறுங்கியது. சக்கி ரயில்வே பாலத்தின் தூண் வெள்ளத்தில் உடையும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.