ரூ.3.85 கோடியை சுருட்டி அமெரிக்காவிற்கு பறந்த உ.பி., இளைஞர்
ராமர் கோவில் பிரசாதம் மூலம் மெகா ஆன்லைன் மோசடி
அயோத்தி உத்தரப்பிரதேச மாநி லம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி யால் திறக்கப்பட்டது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்குவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டதாக அயோத்தி காவல் நிலையங்களில் ஏராள மான புகார்கள் பதிவு செய்யப் பட்டன. இதுதொடர்பாக வழக் குப்பதிவு செய்த காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் நிர்வா கத்தின் பெயரில், உத்தரப்பிர தேசத்தின் காஸியாபாத்தைச் சேர்ந்த ஆஷிஷ் சிங் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரூ.942 விசாரணையில், ராமர் கோவில் குடமுழுக்குக்கு முன் னதாகவே ஆஷிஷ் சிங் ஓர் இணையதளத்தை உரு வாக்கி, 2023 டிசம்பர் 19 முதல் 2024 ஜனவரி 12 ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பக்தர்கள் என 6,30,695 பேரிடம் பிரசாதம் வழங்குவதாக உறுதியளித்தி ருக்கிறார். இந்தியாவில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதம் ரூ. 51 ஆகவும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களுக்கு ரூ.942 (11 டாலர்) நிர்ணயித்து மொத் தம் ரூ.3 கோடியே 85 லட்சம் வசூலித்துள்ளார். ஒருவரு டத்திற்கு மேலாக ராமர் கோவில் பிரசாதத்திற்கு காத்தி ருந்த பக்தர்கள் ஏமாற்றம டைந்து புகார் அளித்தனர். அதன்பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சிங் இந்தியாவில் இல்லை மோசடி வெளிச்சத்திற்கு வருவதை முன்கூட்டியே அறி ந்து இருந்த ஆஷிஷ் சிங் அமெரிக்காவிற்கு தப்பி ஓடி விட்டர். ஆனால் அவர் வாஷிங்டனில் கைது செய் யப்பட்டுள்ளார் என அதி காரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவரிடம் இருந்து ஒரு மடிக் கணினி, இரண்டு ஐபோன்கள், ரூ.13,970 ரொக்கம், 16 அமெ ரிக்க டாலர்கள் மற்றும் அமெ ரிக்க மற்றும் இந்திய அடை யாள அட்டைகள், டெபிட் கார்டுகள், வாஷிங்டனில் இரு ந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் ஒரு சுகாதார அட்டை உள் ளிட்ட ஏராளமான அடையாள மற்றும் வங்கி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.