states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

பாகிஸ்தானின் ராணுவத் தளபதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருந்து கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக தலைவர் நட்டா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். டிரம்ப் பல நாடுகளுக்குள் தலையிட்டு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதை போல் இந்தியாவிலும் முயற்சி செய்கிறாரா?

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

எதிர்க்கட்சித் தலைவரான எனது வீட்டிற்கு வெளியிலேயே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரில்  குற்ற வாளிகளின் ஆட்சி நடக்கிறது. முதல மைச்சர் நிதிஷ் குமார் தனது அதிகா ரத்தை முழுவதுமாக இழந்துவிட்டார். பீகாரில் யாரும் பாதுகாப்பாக இல்லை.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், மோடியின் நண்பரான டிரம்ப் உடன் மதிய உணவு சாப்பிட்டார். இந்தியா-பாகிஸ்தான் போரை பிரதமர் மோடியுடன் ஒரு உரையாடலின் சில மணிநேரத்திலேயே நிறுத்திவிட்டதாக டிரம்ப் இதுவரை 15 முறை கூறியுள்ளார். பஹல்காம் பயங்கர வாத தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த விதவை பெண்களுக்கு பிரதமர் மோடி என்ன சொல்லப்போகிறார்?

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது ஒரு சலுகை அல்ல, மாறாக ஒரு அரசியலமைப்பு உரிமை. மாநில அந்தஸ்து என்பது ஒரு பரிசு அல்ல, அது மக்களின் உரிமை. ஆனாலும் மாநில அந்தஸ்து ரத்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.