பிரதமர் மோடி - விமானப்படைத் தளபதி சந்திப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக் குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் ஏற் பட்டுள்ளது. கடந்த வாரம் அரபிக் கடலில் இந்திய கடற்படை ஏவு கணை சோதனை நடத்தி, போர் கப்பல்களை நிறுத்தியது. தொட ர்ந்து சனிக்கிழமை அன்று பாகிஸ் தான் ராணுவம் வேகு ரக ஏவு கணை சோதனை நடத்தி, சிறப்பு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கணிக்க முடியாத அள வில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த பதற்ற மான சூழலுக்கு இடையே ஞாயி றன்று தில்லியில் பிரதமர் மோடி யுடன் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது பஹல் காம் தாக்குதல் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட தாக செய்திகள் வெளியாகியுள் ளன. முன்னதாக சனிக்கிழமை அன்று பிரதமர் மோடியை கடற் படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் என் பது குறிப்பிடத்தக்கது.