states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

அதானி துறைமுகங்களில் எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. பணம், பாலிசி, பிரீமியம் அனைத்தையும் மக்கள் தருகின்றனர். ஆனால் பாதுகாப்பு, வசதி, நன்மை அனைத்தையும் அதானி பெறுகிறார். 

சமாஜ்வாதி மூத்த தலைவர், ராம்கோபால் யாதவ்

இந்திய மக்கள் இருளில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற  கூட்டத்தை கூட்டுவது முக்கியம். பிரதமர் மோடி முழு உலகிற்கும் செல்கிறார். ஆனால்  நாடாளுமன்றத்தையும் இந்திய மக்களையும் அவர் இருளில் வைத்திருக்கிறார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி

ஒரு பிரச்சனைக்கு எப்போதுமே துப்பாக்கிகள் தீர்வு அல்ல. அதனால் ஜம்மு-காஷ்மீரில் ஒரு அரசியல் செயல்முறை இருக்க வேண்டும். காஷ்மீர் பண்டித சகோதரர்களும், சகோதரிகளும் மரியாதையுடன் திரும்பி இங்கே தங்கும் வரை அந்த செயல்முறை முழுமையடையாது.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு சாதாரண கடிதம் அல்ல. இது நாட்டு மக்களின் குரல். பஹல்காம் குறித்து ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடத்தினால், நாட்டின் கண்ணியம் காக்கப்படும், மக்களுக்கு பதில் கிடைக்கும். டிரம்ப் கோரிக்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க முடிந்தால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் சிறப்பு அமர்வு ஏன் நடத்த முடியாது?