வாக்கு திருட்டு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த கர்நாடக அரசு
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதி யில் 2023ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டதாகவும், வாக்கு திருட்டு நடைபெற்ற தாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி குற்றம்சாட்டப்படும் முன்பே இந்த வாக்கு திருட்டு தொடர்பாக தகவல் வெளியான நிலையில், 18 மாதங்களாக கர்நாடக சிஐடி (குற்ற புலனாய்வு துறை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட சில தரவுகளை அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 18 மாதங்களில், 18 முறை சிஐடி கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதார மற்றது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. ஆலந்த் தொகு தியில் நடைபெற்ற வாக்கு திருட்டு, வாக் காளர் பட்டியல் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் குற்ற புலனாய்வு துறை ஏடிஜிபி கே.பி.சிங் இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த குழு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எழுந்த வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.