இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய மோதல் நிறுத்தத்தில் தனது பங்கு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் வெவ்வேறு கூற்று களை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் யார் உண்மை கூறுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
15ஆவது முறையாக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து 15வது முறையாக “இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன்” என்று கூறியுள்ளார். “அவர்கள் போருக்குள் சென்றுகொண்டிருந்த னர். இரு பெரிய அணுஆயுத நாடுகளுக்கு இடையிலான போரை நான் நிறுத்தினேன்” என்று டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரி வித்தார். மேலும் “மோடி ஒரு அருமையான நபர். நேற்று இரவு அவருடன் பேசினேன்” எனவும், “ஐ லவ் பாகிஸ்தான்” எனவும் கூறி யுள்ளார். ஆனால் இந்திய வெளியுறவுத்துறை செய லாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே மோதல் நிறுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பேச்சுவார்த்தையோ அல்லது வர்த்தக மிரட்டலோ போர் நிறுத்தத்திற்கு காரணம் அல்ல என்றும், இந்த கருத்தை பிரதமர் மோடி டிரம்ப்பு டனான தொலைபேசி உரையாடலில் தெளி வாக தெரிவித்தார் என்றும் மிஸ்ரி அறி வித்தார்.
முனீருடன் விருந்து
ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா திரும்பிய டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீரை சந்தித்து உணவருந்தியுள்ளார். டிரம்ப், முனீரை “மோதலை தடுப்பதில் செல்வாக்கு மிக்க நபர்” என்று புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து மோதலை தடுப்பதில் முனீர் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார், இந்திய தரப்பில் மோடி அதை செய்தார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ‘மூன்றாம் தரப்புக்கு வேலையில்லை’ என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, டிரம்ப் மீண்டும் தான் தான் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக கூறினார். இந்த நிலையில் மோடி மறுத்த பிறகும் டிரம்ப் வலிந்து நான்தான் போரை நிறுத்தி னேன் என்று சொல்வதற்கான காரணம் என்ன, இருவரில் பொய் சொல்வது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2018இல் டிரம்ப் பேசியது என்ன?
பாகிஸ்தானுக்கு தனது ‘அன்பை’ வெளிப் படுத்திய டிரம்ப்பின் தற்போதைய கூற்றுகள், அவர் 2018ல் பாகிஸ்தான் குறித்து வெளி யிட்ட கடுமையான விமர்சனங்களுடன் முரண் படுகின்றன. 2018 ஜனவரி 2இல் டிரம்ப் டுவிட்டரில், “அமெரிக்கா முட்டாள்தனமாக கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லி யன் டாலர்களுக்கு மேல் உதவி செய்துள்ளது. பாகிஸ்தான் அமெரிக்க தலைவர்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்காவிடம் பொய்களை சொல்லியும் ஏமாற்றியும் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வேட்டையாடும் பயங்கரவாதிக ளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலி டத்தை வழங்குகிறது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பழைய கூற்றுகளை குறிப்பிட்டு, இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரவில்லையா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர், டிரம்ப்புக்கு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இரு தலைவர்களின் முரண்பட்ட கூற்றுகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. மோதல் நிறுத்தத்தில் உண்மையான பங்கு யாருடையது என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.