“மன்னிப்பு கேட்க முடியாது”
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வாதம்
பெங்களூரு “மன்னிப்பு கேட்க முடியாது” கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வாதம் மன்னணி திரைக்கலைஞரும், மக் கள் நீதி மய்யம் கட்சியின் தலை வருமான கமல்ஹாசன் தான் நடித்துள்ள “தக் லைப்’ படத்தின் புரோ மோஷன் கடந்த மாதம் நடந்த போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” எனக் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேள னம் கமல்ஹாசன் நடித்துள்ள “தக் லைப்” படத்திற்கு தடை விதிப்பதாக அறி வித்தது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல்ஹாசன் திங்களன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா அமர்வு முன்பு செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின்பு நீதிபதி நாக பிரசன்னா,”ஒரு பொது நபர் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட் டால் என்ன சொல்வது? கமல்ஹாசனின் பேச்சால் கர்நாடகாவில் அமைதியின்மை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எதன் அடிப்படையில் கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்? அவர் ஒரு வரலாற்றாசிரியரா? அல்லது மொழியியலாளரா?. மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்சனை முடிந்தி ருக்கும். நீர், நிலம், மொழி இவை மூன் றுமே குடிமக்களுக்கு முக்கியமானது. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை” என கட்ட மாக கூறினார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல்ஹாசன் நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதற்கிடையே கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளன தலைவர் நரசிம்ம லுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதி யுள்ளார். அதில்,”கன்னட மொழியை சிறு மைப்படுத்தும் எண்ணம் இல்லை. கன்ன டத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது” என தெரிவித்திருந்தார். ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு இந்நிலையில், வழக்கு பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாக பிரசன்னா,” கமல்ஹாசனின் கடிதம் திருப்தியாக உள்ளது. ஆனால் அதில் ஒரு வார்த்தை யை சேர்க்க வேண்டும். அதாவது கமல்ஹாசனின் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை விடுபட்டுள்ளது. மன் னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என கேள்வி எழுப்பினார். அப்போது கமல்ஹாசன் தரப்பு,”மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரி விக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசா ரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் கர்நாடகத்தில் “தக் லைப்” படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக் கப்பட்டுள்ளது.