பட்டப்பகலில் 20 குழந்தைகள் கடத்தல்
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தின் போவாய் என்ற இடத்தில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட 20 குழந்தை களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் களமிறங்கினர். கடத்தல் நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 20 குழந்தைகளையும் காவல் துறை பத்திரமாக மீட்டது. குழந்தைக ளை கடத்திச் சென்று ஸ்டூடியோ ஒன்றில் சிறை வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் சுட்டுக் கொலை செய்யப் பட்டார்.
