states

img

ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொலை வழக்கில் 3 குற்றவாளிகளும் விடுவிப்பு

உ.பி. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

லக்னோ, மார்ச் 3 - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உ.பி. மாநிலம் ஹத்ராஸில் தலித் இளம்பெண் சாதிவெறியர்களால் கும்பல் பாலியல் வன் கொலைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குற்றவாளிகளில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நீதி மன்றம் ஏனைய 3 பேரையும் குற்றமற்றவர்கள் என்று அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் இளம்பெண் கடந்த  2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று, நான்குபேர் கொண்ட சாதி ஆதிக்க கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடு மை செய்யப்பட்டார். இதில் உடலின் பல இடங்களில் படுகாயம் அடைந்த அந்த தலித் பெண், தில்லியிலுள்ள சப்தர்கஞ்ச் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்த நிலையில், வன்கொடுமை  நடந்து 15 நாட்கள் கழித்து, சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 29-ஆம் தேதி, பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப் பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் மகளுக்கு நீதிகேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், உ.பி. மாநில பாஜக அரசின் காவல்துறையோ, இறந்த பெண்ணின் உடலை, அவரின் குடும்பத்தினருக்கே தெரியாமல் நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக்கியது. இது தீவிரப் பிரச்சனையாக மாறியது.  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பலரும் ஹத்ராஸிற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் ஆதித்யநாத் அரசின் காவல்துறை  அவர்களை ஹத்ராஸிற்கு உள்ளேயே நுழையவிடவில்லை. செய்தி சேகரிப்பிற்காக  சென்ற சித்திக் கப்பான் போன்ற பத்திரிகை யாளர்களையும் கூட உ.பி. பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதனிடையே, தலித் பெண்ணின் மர ணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் அரசியல் இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்ட பின்னணியில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து, இப்பிரச்சனையைக் கையில் எடுத்தது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. 

அதன்பிறகே, இவ்வழக்கில் சந்தீப் (22), ரவி (28), லவகுஷ் (19), ராம்குமார் (28) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு எதிராக குற்றவாளிகள் சார்ந்த தாக்கூர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். எனினும் நீதிமன்றத் தலையீடு காரணமாக,  4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வந்தது.  இந்த பின்னணியில்தான், ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கில் வியாழ னன்று தீர்ப்பு வழங்கிய ஹத்ராஸ் சிறப்பு நீதி மன்றம், பட்டியல் வகுப்பினர் மீதான வன்கொடு மை தடுப்புச் சட்டத்தின்கீழ் சந்தீப்பை (20) மட்டும் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு, ஏனைய ரவி, லவகுஷ், ராம்குமார் ஆகிய 3 பேரையும் குற்றமற்றவர்கள் என்று கூறியுள்ளது. இது பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தின ரை மட்டுமன்றி, அரசியல் கட்சிகள், தலித் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டா ளர்கள் என பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மரணத்திற்கு முன் தலித்பெண் வாக்குமூலம் 

தந்தும் விடுதலையான குற்றவாளிகள்..! ஹத்ராஸ் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணே மரண வாக்குமூலம் அளித்திருந் தார். அப்படியிருந்தும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு உள்ளான தலித் பெண், செப்டம்பர் 29 அன்று மரணம் அடை வதற்கு முன்னதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் தன்னை ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த சந்தீப் (22), லவகுஷ்(19), ராம்குமார்(28), ரவி (28) ஆகியோர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். மேலும் தனது தாய் மற்றும் சகோதரருடன் புல்வெட்டிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து, தன்னை வயல்வெளிக்கு தனது துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி இழுத்துச் சென்றனர் என்று கூறினார். அங்கு,  தான் கொடூரச் சித்ரவதைக்கும், கும்பல்  பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.  மேலும் தலித் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களும், சித்ரவதையின் கொடூரமான அறிகுறிகள் தலித் பெண்ணின் உடலில் உள்ளன; அந்தப் பெண்ணுக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன; கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் அவரை மயக்கமடையச் செய்தது; இதனாலேயே அவர் சுவாசிக்க சிரமப்பட்டார்; அவரைத் தாக்கியவர்கள் கழுத்தை நெரிக்க முயன்றபோது, தலித்பெண்ணின் நாக்கும் துண்டாகியுள்ளது; 2012-இல் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு இணையாக இந்தக் கொடுமைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும் கூட, லவகுஷ் (19), ராம்குமார் (28), ரவி (28) ஆகிய குற்றவாளிகளை ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது  எப்படி என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.