நாடு முழுவதும் அக்டோபர் 3 முதல் 11 வரை நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட வுள்ள நிலையில், இந்த 9 நாட்களுக்கு ராமர் கோவில் உள்ள அயோத்தியில் இறைச்சி கடைகளை திறக்கக் கூடாது என அம்மாவட்ட நிர்வா கம் மிரட்டல் விடுத் துள்ளது. “இறைச்சி விநியோகம் செய் யப்படுவதையோ, பதுக்கி வைப்பதை யோ பொது மக்கள் கவனித்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரி விக்க வேண்டும். குறிப்பாக உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்” என அயோத்தி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உதவி ஆணை யர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நவ ராத்திரி பண்டிகைக்காக ஒரு மாவட்டத் தையே இறைச்சி உண்ணக் கூடாது என உத்தரவிட்டு இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.