மும்பை, ஜுன் 28 - “பாட்னாவில் நடைபெற்ற எதிர்க் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் பிரதமர் பதவி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்க சில இடங்களில் திட்டமிட்டு முயற்சிப்பது குறித்தும், ஆட்சியில் இருப்பவர்கள், அதாவது பாஜக சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த எப்படி முயற்சி செய்கிறார்கள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையிலான பிளவு எந்தவொரு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும், அத்தகைய விஷ யத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதுதான் எதிர்க்கட்சிகள் முடிவெடுக்கும் புள்ளியாகும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.