மும்பை, மே 8 - பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருப்பதாகவும், கர்நாடக சட்டப்பேரவையிலும் பாஜக தோல்வி அடைவது உறுதி என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:- எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்கு வோம். கேரளாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பாஜக இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டே-வின் புத்தி சாலித்தனத்தால் அவர்களால் மகா ராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராக இருந்தபோது சில காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தது. ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரை படத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநி லங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பாஜக அல்லாத அரசுதான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. இவ்வாறு சரத் பவார் கூறியுள் ளார்.