states

img

‘வந்தே பாரத்’ ரயிலில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்!

போபால் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ‘வந்தே பாரத்’ ரயில் (எண் 20171), போபாலில் இருந்து திங்கிட்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த ரயில், காலை 7 மணியளவில் குர்வாய் கெத்தோரா ரயில் நிலையத்தில் நிற்கும்போது, ‘சி-14’ பெட்டியில் இருந்த பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெட்டியில் இருந்த 36 பயணி களும் இறங்கி ஓடியுள்ளனர். ரயில்வே துறைக்கு தகவல் கிடைத்த தும், அவர்கள் தீயணைப்புப் படையினரை வரவழைத்து தீயை அணைத்துள்ளனர்.