states

img

பாஜகவால் சிரியா, லிபியா போல மாறிய மணிப்பூர்!

எங்கு பார்த்தாலும் வன்முறை,  தீவைப்பு,  குண்டு வீச்சு;  உயிர்ப்பலி

4 அமைச்சர்கள், எம்எல்ஏக்களிள் வீடுகள் மீதும் தாக்குதல்

இம்பால், ஜூன் 17 - நாட்டின் வடகிழக்கு மாநிலமான  மணிப்பூர், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கி றது. ஒவ்வொரு நாளும் படு கொலை, குண்டுவீச்சு, தீவைப்பு என  வன்முறைச் சம்பவங்கள் அரங் கேறிக் கொண்டிருக்கின்றன. மணிப்பூரின் ஆட்சியதிகா ரத்தைப் பிடிப்பதற்காக, மக்களைச் சாதி அடிப்படையில் பிரித்தாளும் அரசியலை, பாஜக கையில் எடுத்  தது. ஒட்டுமொத்த மக்கள் தொகை யில், 53 சதவிகிதமாக இருக்கும் மெய்டெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதாக கூறியது. இதன்  மூலம் அங்குள்ள பழங்குடிகளான குக்கி, நாகா இனத்தவருக்கும், மெய்  டெய் மக்களுக்கும் மோதலை ஏற்  படுத்தியது. அதன் விளைவு, மணிப்பூர் மாநிலமே தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசம டைந்து கொண்டிருக்கிறது.

மே 3-ஆம் தேதி முதல் தற்போது  வரை 105 பேர் வரை பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், நிறு வனங்கள், வாகனங்கள், வழி பாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டு உள்ளன. வன்முறையில் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம் பேர் 372  முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். வன்முறை மேலும்  பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.  சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ்,  ராணுவம் என 50 ஆயிரம் பேர்  பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள னர். எனினும், வன்முறை குறைந்த பாடாக இல்லை. உள்துறை அமைச்  சர் அமித்ஷா மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திலேயே நான்கு நாட்களாக முகாமிட்டார். மாநில டிஜிபி பி. டோங்கலை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக ராஜீவ்  சிங் நியமிக்கப்பட்டார். எனினும்  இவை எதுவுமே பலனளிக்க வில்லை. மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட ஆளுநர் அனுசுயா உய்கே தலைமையில் ஒரு குழுவை கடந்த ஜூன் 10 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்தார்.  ஆனால், பிரபல நாடகக் கலை ஞர் ரத்தன் தியாம், பிரபல நடிகரும்  இயக்குநருமான மகோன்மணி மோங்சபா உள்ளிட்டோர் குழுவிலி ருந்து விலகினர். குக்கி சமூகத்தினர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மா டார்கள் என்று விலகிக் கொண்டது.

அதுமட்டுமல்லாமல், குக்கி  பழங்குடியினரை அழித்தொழிக்கும் கொள்கையை, ஒன்றிய - மாநில  ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ள தாகவும், மணிப்பூரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு, ஆயு தமேந்திய பாஜக ஆதரவுக் குழுக்  களே காரணம் என்று மணிப்பூர் பழங்குடியினர் தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்திலேயே  பகி ரங்கமாக குற்றச்சாட்டு வைத்தது. மணிப்பூரில் ஒருமாதத்திற்கும் மேலாக வன்முறை தொடரும் நிலை யில், பிரதமர் நரேந்திர மோடி, இது வரை ஒருமுறைகூட வாய் திறந்து  பேச மறுப்பதேன்.. மக்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தாதது ஏன்?  என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக் கும் இப்போது வரை பதிலில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, “வன் முறை குறித்துப் பிரதமர் பேச வேண் டும், அதற்கு பொறுப்பேற்க வேண் டும். வன்முறை சம்பவத்தை விசா ரிக்கவும், பொறுப்பை நிர்ணயிக்க வும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்  டும். மக்களுக்கு நீதி வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நிவாரணப் பணிகளை  விரைவுபடுத்த வேண்டும். மாநி லத்தில் ‘பிளவுவாத அரசியலை’ கை விட வேண்டும் என்று சுமார் 500 சிவில்  சமூக அமைப்புகள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள், முன்னாள் அதிகாரி கள் கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பான 2 பக்க அறிக்கையை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்டுள்ளார். இதனிடையே, மெய்டெய், குக்கி  ஆகிய இரண்டு தரப்பிலும் உருவாகி யுள்ள ஆயுதம் ஏந்திய குழுக்கள், அறிவிக்கப்படாத யுத்தத்தை நிகழ்த்தி வருகின்றனர். மெய்டெய் பிரிவினர் குக்கி சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், மக்களைத் தாக்கு வதும், பதிலுக்கு குக்கி சமூகத்தினர்,  மெய்டெய் பிரிவு தலைவர்களைத் தாக்குவதுமாக உள்ளனர். உடமை களுக்கு தீவைத்து வருகின்றனர். கடந்த 20 நாட்களில் மணிப்பூர் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டு வீசி தீக்கிரை யாக்கப்பட்டு உள்ளன.

மே 28 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ  ரஞ்சித் சிங்கின் வீடு தாக்கப்பட்டது. செரோ கிராமத்தில் உள்ள எம்எல்ஏ  ரஞ்சித்தின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. ஜூன் 8 அன்று பாஜக எம்எல்ஏ சொரைசம் கேபி வீட்டில் தாக்குதல் நடத்தப் பட்டது. பைக்கில் வந்த இருவர், வீட்டில் வெடிகுண்டை வீசினர்.  ஜூன் 14 அன்று, இம்பாலின் லாம்பேல் பகுதியில் உள்ள தொழில்  துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெ னின் அதிகாரப்பூர்வ பங்களா தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது கிப்ஜென் வீட்டில் இல்லை. இவர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடைசியாக, இம்பாலில் உள்ள  பாஜக எம்.பி.யும், ஒன்றிய வெளியு றவுத்துறை மற்றும் கல்வித்துறை இணை அமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பங் களாவின் இரண்டு தளங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது அமைச்சர் வீட்டில் இல்லை. அவர் கேரளத்தில்  இருந்தார். அவர், மெய்டெய் சமூகத்  தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்  தக்கது. 

தனது பங்களா தீக்கிரையாக் கப்பட்டது குறித்து கருத்து தெரி வித்த ஒன்றிய இணையமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங், “எனது வீட்டின்  தரை தளம் மற்றும் முதல் தளம்  சேதம் அடைந்துள்ளது. அப்போது  நானோ அல்லது எனது குடும்பத்தி னர் யாரும் அங்கு இல்லை. அந்த நேரத்தில், அதிருஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு முற்றி லும் தோல்வியடைந்துள்ளது. தற் போதுள்ள அரசால் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை. மாநில  இயந்திரம் எப்படி தோல்வியடைந் தது என்று எனக்குத் தெரிய வில்லை” என்று பேட்டி அளித்துள் ளார். அதாவது பாஜக-வைச் சேர்ந்த  ஒன்றிய அமைச்சரே, பாஜக அரசு  தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டி னண்ட் ஜெனரல் எல். நிஷிகாந்தா சிங் டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நான் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு சாதா ரண இந்தியன். ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழ்கிறேன். மாநிலம் தற்போது மாநிலமாக இல்லை. லிபியா, லெபனான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளைப் போலவே உயிரும் உடைமைகள் எப்போது வேண்டுமானாலும் அழிக் கப்படலாம் என்ற நிலையில்தான் மணிப்பூர் இருக்கிறது. இதனை யாராவது கேட்கிறீர்களா?” என்று தனது அதிருப்தியை வெளியிட் டுள்ளார்.