புதுதில்லி, ஜூலை 27- பாஜக தூண்டிவிட்ட கலவரத்தால், கடந்த 3 மாதங்களாக பற்றியெரியும் மணிப்பூருக்குச் செல்ல, 26 எதிர்க்கட்சி களைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் செல்கின்றனர். மணிப்பூரில் பழங்குடி பெண் களுக்கு இழைக்கப்பட்ட கும்பல் வல்லு றவுக் கொடுமைகளும், வன்முறை களில் 160-க்கும் அதிகமானோர் உயி ரிழந்த சம்பவங்களும் நாட்டையே உலுக்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 85 நாட்களுக்கும் மேலாக தொடரும் மணிப்பூர் வன்முறை தொடர்பான உண்மை நிலவரங்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த ஒருவாரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று விதி எண்: 267-இன் கீழ் இந்தியா கூட்டணியின் 51 எம்.பி.க்கள், ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அளித்த னர். அத்துடன் கடந்த ஒருவாரமாக நாடா ளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பி போராட்டம் நடத்தி வருகின்ற னர்.
இதனால், ஜூலை 20 அன்று துவங்கியது முதலே நாடாளுமன்றம் முடக்கம் கண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியை நாடா ளுமன்றத்திற்கு வர வைப்பதற்கான வியூகம் என்ற வகையில், ஒன்றிய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர் மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் மக்களவை துணைத் தலை வரும் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் புதனன்று மக்கள வையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மா னத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மா னத்திற்கு காங்கிரஸ், திமுக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்ப தாக அறிவித்த நிலையில், எதிர்க் கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மா னத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அனைத்துக் கட்சித் தலைவர்களுட னும் விவாதித்து, விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான சரி யான நேரத்தை உங்களுக்குத் தெரி விப்பேன் என மக்களவை சபாநாய கர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவர் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்ற நிலை உள்ளது.
கறுப்பு உடையணிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
இந்நிலையில், வியாழனன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசின் அலட்சியத்தைக் கண் டித்து, “இந்தியா” கூட்டணியில் உள்ள அனைத்து எம்பி-க்களும் “கறுப்பு” நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கருமை நிறத்தில் மூழ்கின. மாநிலங்களவையில் வெளியு றவு அமைச்சர் ஜெய்சங்கர் மணிப் பூர் பற்றி பேசாமலே நாட்டின் பெரு மைகள் என்ற பெயரில் “உப்பு சப்பு இல்லாத கருத்துக்களை” கூறிக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை அவைக்கு வர வலியு றுத்தியும், மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தியும் பேசினர். அப்போது என்டிஏ கூட்ட ணியினர், “மோடி, மோடி..” என்று குரல் எழுப்ப, எதிர்க்கட்சி எம்.பி.க் கள் “இந்தியா” “இந்தியா” என ஆக் ரோஷமாக முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் முழக் கத்தால் மிரண்ட பாஜக எம்பிக்கள் பின்வாங்க பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண் டும் மாநிலங்களவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து மாநிலங்களவை துணைத் தலை வர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
திணறிய ஓம் பிர்லா
மாநிலங்களவை போல மக்கள வையிலும் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கருப்பு உடைகளுடன் “பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கோரி முழக்கங் களை எழுப்பி போராட்டத்தில் ஈடு பட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா வின் இருக்கை முன்பும் பதாகைக ளுடன் திரண்டனர். இதனால் மக்க ளவையும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடா ளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதுமே ஒத்திவைக்கப் பட்டன.
மணிப்பூர் செல்லும் “இந்தியா” கூட்டணி
இதனிடையே, பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் மக்களை எட்டிப்பார்க்காத நிலையில், பாஜகவின் வகுப்புவாத அரசிய லால் பற்றி எரியும் மணிப்பூரின் உண்மை நிலையை ஆய்வு செய்ய “இந்தியா” கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ள னர். இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அர சின் தடைகளுக்கு மத்தியில், கடந்த ஜூன் இறுதியில் மணிப்பூர் சென்று, அங்கு சொந்த நட்டிலேயே அகதிகளாக வாழும் மணிப்பூர் மக்களைச் சந்தித்து பேசி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகள் திருத்த மசோதா நிறைவேற்றம்
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே விதிமுறை கள் திருத்தம் (ஜன் விஸ்வாஸ்) மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. இதுபோக கட லோரப் பகுதி கனிம சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா மற்றும் திரைப்படக் கலை (சினி மாட்டோகிராப்) திருத்த மசோதா விவாதத்திற்காக அறிமுகப்படுத் தப்பட்டது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளின் அமளியால் மேற்குறிப்பிட்ட மசோதா அறிமுக விவாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஒப்புதலை பெற்ற வனப் பாதுகாப்பு திருத்த மசோதா வும் மக்களவையில் நிறைவேற்றப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.