சமீபத்தில் நிறைவுபெற்ற மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகு திகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 5-ஆவது முறையாக முதல்வர் பதவியில் அமர சிவ்ராஜ் சிங் சவுகான் தயாராக இருந்தார். ஆனால் அதிகம் அறி யப்படாத மோகன் யாதவை பாஜக மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த் தியது. இதனால் பாஜகவின் முக்கிய முகமாக இருந்த சிவ்ராஜ் சிங் சவு கான் ஓரங்கட்டப்படுவதாக செய்தி கள் வெளியாகி சலசலப்பை ஏற் படுத்தியது.
கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்,”இதற்குமேல் எதையும் கேட்டு தில்லிக்குச் செல்ல தயா ராக இல்லை. அவ்வாறு கேட்பதற்கு சாவதே மேல்” என்றும், தொடர்ந்து கடந்த வாரம்,”ஒருவர் பதவியில் இல்லை என்றால் பதாகைகளில் அவ ரது படம் கழுதையின் தலையிலிருந்த கொம்புகள் போல காணாமல் போய் விடும்” என அடுத்தடுத்து மறைமுக மாக பாஜகவை சாடினார். மோடி யை பற்றி இடையில் புகழ்ந்து பேசி யதால், சவுகான் பேசியதை பாஜக வினர் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், சனியன்று மகா ராஷ்டிரா மாநிலம் புனேயில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மேலிடத்துக்கு எதிராக அடுத்தகட்ட பவுன்சரை வீசியுள்ளார் சிவ்ராஜ்சிங் சவுகான். நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது,”தற்போது நான் முன்னாள் முதல்வர்.
ஆனால், நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அல்ல. நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்த ஒருவர் பதவி விலகினால், அவரை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நிகழ்வு கள் நடக்கும். ஆனால், நான் பதவி யில் இருந்து விலகிய பிறகு எங்கு சென்றாலும் மக்கள் என்னை “மாமா” என அன்புடன் அழைக்கின்றனர். முதல்வர் பதவியில் இருந்து விலகி னாலும், தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை.
11 தேர்தல்களில் வென்றுள்ளேன். ஆனால் ஒரு தேர்த லில் கூட எனக்காக நான் பிரச்சாரம் செய்ததே கிடையாது” என ஆதங்கத்துடன் பேசினார். நிகழ்ச்சி மேடையில் இருந்து பாஜகவினர் சிவ்ராஜ் சிங் சவுகானின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பாஜக மேலிடத்துக்கு எதிராகவும், தனி கூட்டத்துடன் வலம் வருவதாலும் மத்தியப்பிரதேசத்தில் விரைவில் பாஜக இரண்டாக உடை யும் என தகவல் வெளியாகியுள்ளது.