பத்லாப்பூர் பாலியல் வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது மும்பை உயர்நீதிமன்றம்.
மகாராஷ்டிரா மாநிலத்திம் பத்லாப்பூரில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் 3 மற்றும் 4 வயதுடைய சிறுமிகள், வேலை செய்யும் உதவியாளரால் கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பெற்றோர்களை 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், இச்சம்பவத்தை கண்டித்து அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, கடமை தவறிய காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்த அம்மாநில அரசு, இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.