பெங்களூரு, ஏப். 29 - கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே 10 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள் ளது. இதில், ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான பாஜக, பிரதான எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். மக்களின் அதிருப்தி காரணமாக, பாஜக-வினர் கிராமங்களுக்கு வாக்கு கேட்டே செல்ல முடியவில்லை. பல்வேறு இடங்களில் பாஜக வேட்பா ளர்கள் ஊருக்குள்ளேயே நுழைய முடியாமல் விரட்டியடிக்கப்படும் சம்ப வங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், தோல்வி பயத்தில் கதி கலங்கி நிற்கும் பாஜக தலைவர்கள், மக்களை நெருங்க முடியாததால், போட்டியிலிருந்து விலகிக் கொள்ளு மாறு எதிர்க்கட்சி வேட்பாளர்களின் கைகளில், கால்களில் விழுவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில்தான், சாம்ராஜ் நகர் தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியை போட்டியிலிருந்து விலகிக் கொள்ளு மாறு கூறி, பாஜக அமைச்சர் சோமண்ணா பேரம் நடத்திய ஆடியோ வெளியாகியுள்ளது.
மல்லிகார்ஜூன சாமியுடன், சோமண்ணா செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘நீங்கள் என்னுடைய நண்பர் இல்லையா? யாரோ தூண்டி விட்ட தால்தானே எனக்கு எதிராக போட்டியிடு கிறீர்கள்... தயவுசெய்து முதலில் வேட்பு மனுவைத் திரும்ப பெறுங்கள். உங்க ளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுக்கிறேன். அடுத்து பாஜக ஆட்சி தான் அமைய உள்ளது. கார் வேண்டு மானால் வாங்கிக் கொடுக்கிறேன். கேட்கும் பணத்தை வீட்டுக்கே கொடுத்து அனுப்புகிறேன்’’ என அமைச்சர் சோமண்ணா, காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடியுள்ளார். அதற்கு மல்லிகார்ஜூன சாமி, “யாரும் என்னை தூண்டிவிட வில்லை. இப்போது மனுவைத் திரும்பப் பெற வாய்ப்பு இல்லை. நான் உங்க ளுடைய ஆள் என்பதால், உங்களின் விருப்பப்படியே நடப்பேன். அடுத்த முதல்வர் நீங்கள்தான் அண்ணா’’ என பதிலளித்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடி யோவின் உண்மைத்தன்மை கண்டறி யப்பட்டு அதனடிப்படையில் நடவ டிக்கை எடுப்போம் என்று கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சர் சோமண்ணா, ஏற்கெனவே தோல்விபயம் காரண மாக வருணா மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.