states

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு, பிப்.14-  கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரி விக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் ஹிஜாப், காவி உடை அணியும் பிரச்சனை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போரா ட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவி யது. இதையடுத்து பள்ளி, கல்லூரி களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது.  இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், திங்களன்று முதல் பள்ளிகளை திறக்கவும் உத்தர விட்டது.  இந்நிலையில், 1 முதல் 10ம் வகுப்புக்கு மட்டுமே பள்ளிகள் திங்களன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை பள்ளிகளில் விடு வதற்காக பெற்றோர்களும் வந்திருந்த னர். பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர்கள் கூறினர். ஆனால் அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனு மதிக்க முடியும் என்று அவர்கள் தெரி வித்தனர்.