புதுச்சேரி, டிச. 30- ஆண்டுதோறும் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இப்போதே ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். கடற்கரை, பாரதி பூங்கா, தாவர வியல் பூங்கா, சின்னவீராம் பட்டினம் கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என அனைத்து பகுதிகளிலும் பயணி கள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை யால் தற்போதே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக கடற்கரை, ஓட்டல்களில், இசை நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இணையாக வருபவர்கள், குடும்பத்துடன் வருவோர் என தரம் பிரித்து விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளின் வாகன நடமாட்டம் அதிகமாக இருப்ப தால் நகரப் பகுதியில் மாலை நேரங்களில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. தெருக்களின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.