புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் வழங்க வேண்டிய போனஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படமால் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன.