states

img

ஆர்ஜேடி - காங். - இடதுசாரிகள் தொகுதி பங்கீடு நிறைவு

பாட்னா, மார்ச் 29 - பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 35-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு பெரும்பாலான மாநிலங்களில் நிறைவு பெற்ற நிலையில், பீகார் மாநிலத்திலும் “இந்தியா” கூட்டணியின் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வெள்ளியன்று கையெழுத்தானது.

40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி மக்களவை தேர்தலை சந்திக்கிறது. கடந்த செவ்வாயன்று இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை  தில்லியில் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் இறுதி முடிவு  எடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து  வெள்ளியன்று பீகார் தலைநகர் பாட்னா வில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாகவும், போட்டி யிடும் இடங்களையும் கூட்டாக அறிவித்த னர்.

அதில், “மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்  கட்சி 26இல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) 3 இடங்களி லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு இடங் களிலும் போட்டியிடுகின்றன” என கூறினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கஹாரியா தொகுதியில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.