சமீபகாலமாக நிதிநெருக்கடி, கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் தற்கொலை செய்து வருவது கடு மையாக அதிகரித்து வருகிறது. மகா ராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற் பட்ட குடும்ப தற்கொலைகள் அரங் கேறியுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜலந்தரின் ஆதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் (59) என்ப வர் தனது மனைவி, இரண்டு மகள் கள், பேத்தியை கழுத்தை நெரித்து கொன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 5 உடல்களையும் கைப்பற்றி பிரே தப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்த அறையில் தற் கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மன்மோகன் சிங் கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தலைமுறையே அழியும் சோகம்
தவறான பொருளாதார கொள் கையாலும், தனது நண்பர்களான அதானி மற்றும் அம்பானி போன்ற பணக்காரர்களின் வளர்ச்சிக் காக மட்டுமே பிரதமர் மோடியின் பாஜக அரசு செயலாற்றி வரும் நிலை யில், நாட்டில் சிறுவணிகர்கள், தொழில் முனைவர்கள் மிக மோசமான நிலை யில் நிதிநெருக்கடியை சந்தித்து வரு கின்றனர். இதனால் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த தற்கொலைகள் ஏறுவரி சையில் அதிகரித்து வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தற்கொலை கள் என சாதாரண வாக்கியமாக கூறப் பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை தோராயமாக 5-யை தாண்டுவதால் ஒரு தலைமுறையே அழியும் சோக மான நிகழ்வுகள் அரங்கேறுகிறது என் பதும் குறிப்பிடத்தக்கது.