states

img

தெலுங்கானா பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தெலுங்கானா பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சிபிஎம் மத்திய குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி எம்.பி-யான சோயம் பாபு ராவ், தொகுதி மேம்பாட்டு நிதியில் வீடு கட்டியதாகவும், தனது மகனின் திருமணத்திற்கு நிதியை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளதால் சர்ச்சை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சோயம் பாபு ராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சிபிஎம் மத்திய குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் மத்திய குழு கூறியதாவது: "தெலுங்கானா பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சோயம் பாபு ராவ்  தொகுதி மேம்பாடு நிதியை தனது சொந்த வீடு கட்ட பயன்படுத்தினார். 
வருமானவரித்துறை ரெய்டு இல்லையா? CBI ரெய்டு இல்லையா? இந்த அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர் என்பதால் அமைதி காக்குமா?". இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.