தெலுங்கானா,நவம்பர்.20- தெலுங்கானாவில் எஸ்பிஐ வங்கியில் 14 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் கேஸ் கட்டரை பயன்படுத்தி லாக்கரை உடைத்து ரூ.14.94 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிப்பு.
நகைகளைத் திருடியவர்கள் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து திருடியவுடன் சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த ஓராண்டாக இந்த வங்கிக்குக் காவல் பணிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.