states

லக்கிம்பூர் கெரி வழக்கு ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனை ஏன் ரத்து செய்யவில்லை

புதுதில்லி, மார்ச் 30- விவசாயிகளுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்து செய் யக்கோரி உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணி சென்றனர். அப்போது ஒன் றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கார் மூலம் பேரணியை சீர்குலைத்து, விவசாயி களை காரை ஏற்றிக்கொன்றார் .விவ சாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டி ருந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப்பிரதேச அரசு சார்பில் வழக் கறிஞர் மகேஷ் ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக் கொண்டும் காவல்துறை தரப்பில் ஏன் நட வடிக்கை எடுக்கவில்லை என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசின் தலைமை செயலாளருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் தக வல் தெரிவிக்கவில்லை என்று மகேஷ் ஜெர்மனாலி தெரிவித்தார். இதனை யடுத்து ஜாமீன் மனுவை ரத்து செய்யு மாறு சிறப்பு புலனாய்வுக்குழு அதி காரி கேட்டுக் கொண்டதன் அறிக்கை நகலை உத்தரப்பிரதேச அரசுக்கு  அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.