குமாரசாமி கேள்வி
பெங்களூரு, ஏப்.6- மக்கள் மீது விலைவாசி உயர்வு என்ற யுத்தத்தை பாஜக தொடுத்தி ருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வ ரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்ப தாவது: பாஜகவின் விலைவாசி உயர்வுக் கொடூரம் தொடர்ந்து வருகிறது. பெட் ரோல் - டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகி றது. அத்துடன் தற்போது ‘கரண்ட் ஷாக்’ போல, மின் கட்டணமும் உயர்த் தப்பட்டுள்ளது. முறையாக மின்சாரம் வழங்காத அரசு, இந்தக் கோடையில் யூனிட் டுக்கு 35 காசுகள் கட்டணத்தை அதி கரித்துள்ளது. மனசாட்சி இல்லாத அர சுக்கு மக்களிடம் பணம் பறிப்பதே தொழிலாகி விட்டது. தரமான மின்சா ரத்தை வழங்க முடியாத அரசு, கட்ட ணத்தை உயர்த்துவதில் மட்டும் ராக் கெட் வேகத்தில் செயல்படுகிறது. ஏழைகள் வீடு கட்ட முடியாது. வயி றாற சாப்பிட முடியாது என்றால், ஏழை கள் இப்போது வெளிச்சத்திலும் இருக்க முடியாது என்றாகி விட்டது. ஏழைகளுக்கு எதிராக பாஜக போர் ஏதும் தொடுத்திருக்கிறதா? என்ற சந் தேகம் எனக்கு இருக்கிறது. மின் தட்டுப்பாடு இல்லை என்றால், இப்போது கட்டண உயர்வு ஏன்? அரசே மக்கள் மீது சுமையை ஏற்றி அவர் களுக்கு மின்சாரத்தை விற்கிறதா? அவ்வாறெல்லாம் இல்லை என்றால், கட்டண உயர்வைத் திரும்பப் பெற லாமே! இவ்வாறு குமாரசாமி கூறியுள் ளார்.