states

img

அமித்ஷாவின் இந்தித் திணிப்பு பேச்சுக்கு வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு

திஸ்பூர், ஏப்.11- புதுதில்லியில் நடைபெற்ற 37-ஆவது நாடாளுமன்ற ஆட்சி மொழிக் கூட்டத்தில் ஒன்றிய அர சின் உள்துறை அமைச்சரும், நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுத் தலைவருமான அமித் ஷா அண்மையில் உரையாற்றி னார். அப்போது, “அரசு அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் இந்தியையே பயன்படுத்த நரேந் திர மோடி முடிவெடுத்துள்ளார். இதனொரு பகுதியாக, வட கிழக்கு மாநிலங்களில் மட்டும்  22 ஆயிரம் இந்தி மொழி ஆசிரி யர்கள் பணி அமர்த்தப்பட்டு உள் ளனர். மேலும், வட கிழக்கின் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங் கள் மொழி வழக்கை தேவ நாகரி வரி வடிவில் மாற்றியுள்ள னர். இதுதவிர 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி மொழி யைக் கட்டாயமாக்கவும் வட கிழக்கு மாநிலங்களின் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார். இதற்கு வடகிழக்கு பிராந்தி யங்களின் மாணவ அமைப்பினர் (NESO) கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.  “இந்தியா என்பது பல்வேறு அடையாளங்கள், மொழிகள், கலாச்சாரங்களை கொண்டி ருக்கிறது. இதை, ஒற்றைப் படுத்த முடியாது. கட்டாயம் என்ற பெயரில் இந்தி மொழியை பொது மைப்படுத்தக் கூடாது. ஒன்றிய அரசின் இந்த வேகமான மொழித் திணிப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று கூறி யுள்ள அவர்கள், “அமித் ஷா  தனது உரையில் வடகிழக்கு மாநிலங்களை மட்டும் குறிப் பிட்டு சொல்ல வேண்டிய தேவை யென்ன?” என்றும், “தென்மாநி லங்களில் மொழித் திணிப்புக்கு எதிரான கலகக் குரல்கள் வலு வாக உள்ளன. அதனால், வட கிழக்கு மாநிலங்கள் எளிதான சுமை என்று ஒன்றிய அரசு கருது கிறதா?” என்றும் கேள்வி எழுப்பி யுள்ளனர். அசாம் சாகித்திய சபா-வும், “அமித்ஷாவின் பேச்சு, வட கிழக்கு இந்தியாவின் பழங்குடி மற்றும் பூர்வீக மொழிகளின் இருண்ட எதிர்காலத்தை காட்டு கிறது” என்று கவலை தெரிவித் துள்ளது.