states

img

10 லட்சம் வேலை எங்கே?

நாட்டில் வேலையின்மை மிக மிக அதிகமாக அளவுகளைத் தொட்டுள்ள போதிலும், ஒன்றிய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அதி காரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்ட சுமார் 10லட்சம் வேலைகள் காலியாக விடப்பட்டிருக்கின்றன.   அது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு, அனுமதி அளிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கையை கடுமையாக வெட்டிக் குறைத்துள்ளது என்பது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘சம்பளம் மற்றும் படிகள் குறித்த ஆண்டறிக்கையில்’ வெளிப்பட்டிருக்கிறது.  இந்த அறிக்கையின் படி  ஒன்றிய அரசாங்கத்தின் துறைகளில் மொத்தம் 9.64 லட்சம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. மேலும் ஒன்றிய அரசின் குரூப் ‘சி’ பிரிவு பணியிடங்களைப் பொறுத்தவரை 2021 மார்ச் 1 அன்று மொத்தம் 40.35 லட்சம் பணியிடங்கள் இருந்தன; ஆனால் ஒரே ஆண்டில் 2022 மார்ச் 1 அன்று 39.77  லட்சம் பணியிடங்களாக வெட்டப்பட்டுள்ளன. இந்த  எண்ணிக்கையில் யூனியன் பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. 

அனுமதி அளிக்கப்பட்ட பணியிடங்களின் எண்  ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் பெரும் எண்ணிக்கை யில் வெட்டப்பட்டிருப்பதன் விளைவாக, 2010க்குப் பிறகு  ஒன்றிய அரசாங்கத்தின் பணியிடங்கள் முதல் முறை யாக தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையை தொட் டுள்ளன எனவும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. பணியிடங்கள் வெட்டப்பட்டதில் குறிப்பாக ரயில்வே, பாதுகாப்பு (சிவில்), உள்துறை, அஞ்சல்துறை மற்றும் வரு வாய்த்துறை ஆகிய ஐந்து பெரும் துறைகளில் மட்டும்  கிட்டத்தட்ட 92 சதவீதம் ஊழியர் எண்ணிக்கை பறிக்கப் பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ரயில்வே மட்டும்  ஒன்றிய அரசாங்கத்தின் 10 வேலைகளில் 4 வேலை களை அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தத்  துறையில் மட்டும் 3லட்சத்திற்கும் அதிகமான பணி யிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.   கடந்த ஆண்டு அக்டோபரில், 10 லட்சம் புதிய அர சாங்க வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வெற்று வாய்ஜாலம். அப்பட்டமான இரட்டை வேடம்.